தமிழகத்தில் ஒரேநாளில் 167 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் நேற்று 1,48,695 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 23,310 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று சென்னையில் மட்டும் 6,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,72,602 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 13,671 பேர் ஆண்கள், பெண்கள் 9,639 பேர் ஆவர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 20,062 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,28,311 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 167 பேர் நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 58 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 73 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 94 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இதையடுத்து மொத்தம் 14,779 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: