சென்னை: மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் இன்று முதல் 20ம் தேதி வரை அலுவலகத்துக்கு வருவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு:இன்று முதல் வருகிற 20ம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாற்றுத் திறனாளி அரசு பணியாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இன்று (6ம் தேதி) முதல் வருகிற 20ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மாற்றுத் திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்து அரசு உத்தரவிடுகிறது.