போடி: தேனி மாவட்டம், போடி தொகுதியில் அதிமுக சார்பில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், போடியில் உள்ள தனது வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தங்கியுள்ளார். இந்நிலையில், ஓபிஎஸ்சின் ஆதரவாளரான அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர், வேப்பனஹள்ளி எம்எல்ஏகே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார், ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்ச்செல்வம் ஆகியோர் நேற்று ஓபிஎஸ்ஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.