சென்னை: மம்தா பானர்ஜியை கண்டித்து தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று எல்.முருகன் கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேற்கு வங்காளத்தில் 2016 தேர்தலில் மூன்று இடங்களை மட்டும் பெற்ற பாஜ, இப்போது 77 இடங்களை பெற்றிருக்கிறது. மேலும் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பாஜ வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோற்றுப் போனார். இதனால் எரிச்சல் அடைந்துள்ள மம்தா பானர்ஜி, அவருடைய கட்சி குண்டர்களை வைத்து மேற்கு வங்காளத்தில் வன்முறை வெறியாட்டத்தை தொடங்கியிருக்கிறார்.