முக்கிய செய்தி இந்தியா கொரோனா பரவல் காரணமான ஜே.இ.இ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு்; தேதி பின்னர் அறிவிக்கப்படும்: தேசிய தேர்வு முகமை May 04, 2021 JEE, தேசிய தேர்வு முகமை டெல்லி: பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளில் சேர நடைபெறும் ஜே.இ.இ நுழைவுத்தேர்வு ஒத்திவைத்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஜே.இ.இ மெயின் நுழைவுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜே.இ.இ மெயின் நுழைவுத்தேர்வு மே 24 முதல் 28ஆம் தேதி வரையில் நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜே.இ.இ மெயின் நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காணமாக 4-வது முறையாக தேசிய தேர்வு முகமை ஒத்திலைத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தற்போதைய நிலைமையை அறிந்து, தேர்வர்கள் மற்றும் தேர்வு செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வையும் கணக்கில் கொண்டு JEE முதன்மை தேர்வுகள் 2021ம் ஆண்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது. புதிய தேதிகள் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.63,000 கோடி சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.1 கூட தராத ஒன்றிய அரசு.. மாநில நிதியில் செலவீனங்களை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசு!!
திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!: சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தினகரன் நாளிதழும், விஐடியும் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி!!
மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம்: தமிழ்நாடு அரசு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!