கொளத்தூர், எழும்பூர் தொகுதி தேர்தல் அதிகாரிகள் நள்ளிரவில் மாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை: கொளத்தூர், எழும்பூர் தொகுதிக்கான தேர்தல் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு மாற்றம் செய்யப்பட்டனர். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த தொகுதியின் தேர்தல் அதிகாரியாக இருந்த தங்கவேல் மாற்றப்பட்டு, கண்ணன் நியமிக்கப்பட்டார். இந்த தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர் கட்சியினர் விசாரித்தபோது, தங்கவேலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால்தான் தங்கவேல் மாற்றப்பட்டு, கண்ணன் நியமிக்கப்பட்டார் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல, எழும்பூர் தேர்தல் அதிகாரி ரவி மாற்றப்பட்டு லீலாவதி நியமிக்கப்பட்டார். அவர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர். இதனால் அவரது நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகுவிடம் புகார் செய்யப்பட்டது.

Related Stories: