சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு 234 தொகுதிகளில் நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக அதிமுக, பாஜ அணி 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கூட்டணிக்கு அடுத்து சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 3வது இடத்தை பெற்றுள்ளது. இக்கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் திமுக, அதிமுக கட்சிகளை அடுத்து அதிக வாக்குகளை பெற்றுள்ளனர்.