டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொபர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இந்தியா தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. காலை 8 மணியளவில் 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கொரோனா வழிமுறைகளை பின்பற்றி முகவர்களுக்காக அனுமதி அளிப்பது, ஊடகத்துறைக்கான அனுமதி அளிப்பது, காவல் துறைக்கான பாதுகாப்பு கொடுப்பது எப்படி என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.