சென்னை: சென்னையை பொறுத்த வரையில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.4 சதவீதமாக குறைந்து இருப்பதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை சிஐடி நகர் பகுதியில் மாநகராட்சி களப் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பணி திட்டமிடல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆக்சிஜன் படுக்கைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.