சென்னை சென்னையில் தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம்: ஆணையர் பிரகாஷ் பேட்டி Apr 28, 2021 சென்னை கொரோனா சிகிச்சை மையம் ஆணையாளர் பிரகாஷ் சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகம் முழுக்க கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தலைநகரான சென்னையில் அதிக அளவிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் மருத்துவமனைகள் தவிர்த்து ஏராளமான கல்வி நிலையங்கள், சமுதாயக் கூடங்கள் கொரோனா மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையிலும் தொற்று அதிகரித்து வருவதால், தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் கரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என்றும், அதற்காக மாநகராட்சியிடம் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தனியாரும் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என கூறினார். சென்னையில் தனியார் ஓட்டல்கள், மருத்துவமனைகள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொரோனா மையம் தொடங்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் என தெரிவித்தார். கொரோனா சிகிச்சை மையம் தொடங்குவது குறித்து மாநகராட்சி அதிகாரிக்கு இ-மெயில் மட்டும் அனுப்பினால் போதுமானது என கூறினார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்