அந்தமான் செல்ல இருந்த கொரோனா நோயாளி மருத்துவமனையில் சேர்ப்பு

சென்னை: அந்தமான் செல்லும் ஏர்இந்தியா விமானம் நேற்று காலை 6 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அப்போது, அந்தமானை சேர்ந்த மார்சலாம் (40) என்பவரின் மருத்துவ சான்றிதழை பார்த்தபோது, அவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அவரை தனியாக நிறுத்திவைத்தனர். விமான நிலைய சுகாதார துறையினர் விரைந்து வந்து, கொரோனா பாதித்த பயணிக்கு பாதுகாப்பு கவச உடைகளை அணிவித்து ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு அழைத்து சென்றனர்.

Related Stories: