சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மையத்தை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. ஆனால், மக்கள் அச்சத்துடன், அரசு மருத்துவமனைகளுக்கு வருவதால், படுக்கைகள் எண்ணிக்கை வேகமாக நிரம்புகிறது. இதனால், அதிக தொற்றுடன் உள்ள நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க முடியாத நிலையும் உருவாகிறது.