45 நாட்களுக்கு தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: எழும்பூரிலிருந்து (06063) மாலை 6.55 மணிக்கு நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில், மே 6, 13, 20, 27 மற்றும் ஜூன் 3, 10 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக நாகர்கோவிலிலிருந்து (06064) மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில், வரும் 30ம் தேதி, மே 7, 14, 21, 28 மற்றும் ஜூன் 4, 11 ஆகிய தேதிகளில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

Related Stories: