சென்னை: உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மநீம கோரிக்கை விடுத்துள்ளது. மநீம தலைவர் கமல்ஹாசன், தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வேப்பூர் பகுதியைச் சேர்ந்த விசைப்படகில் கடந்த 11ம் தேதி 14 மீனவர்கள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றனர். 13ம் ேததி நள்ளிரவில் விசைப்படகு மங்களூரிலிருந்து 55 கடல் மைல் தூரத்தில் தெற்கு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே சென்று கொண்டிருந்த சிங்கப்பூரை சேர்ந்த தனியார் கப்பல் ஒன்று மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது.