சென்னை: வேளச்சேரியில் கடந்த 2015 நவம்பர் 2ம் தேதி சென்னை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக அவதூறு வழக்கு பதியப்பட்டது. இந்த அவதூறு வழக்கு மீதான விசாரணை தற்போது எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் மீதான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரியும் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கு நேற்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.