மின் வாரியத்தில் உடல் தகுதி தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை பொறியாளர் (பணியமைப்பு) சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2,900 கள உதவியாளர் (பயிற்சி) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2020) மார்ச் 19ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, 15.2.2021 முதல் 16.3.2021 வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அந்த பதவிக்கான உடல் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்பொழுது, கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதாலும், தமிழக அரசின் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவும், உடல் தகுதி தேர்வு நடைபெறும் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், உடல் தகுதி தேர்வு நடைபெறும் நாள் www.tangedco.gov.in என்ற இணையதளம் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: