சென்னை: சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக நடிகை ரைசா 3 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மருத்துவர் பைரவி செந்தில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மன்னிப்பு கேட்காவிட்டால், மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும். ஒரு கோடி இழப்பீடு கேட்டு ரைசா நோட்டீஸ் அனுப்பிய நிலையில் மருத்துவர் பைரவி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நற்பெயரை சீர்குலைக்க ரைசா முயற்சிக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.