கொரோனாவால் உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரிய வழக்கு: முதன்மை செயலர் பதில் தர உத்தரவு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரிய வழக்கில் முதன்மை செயலர் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தனது கணவர் கொரோனாவால் உயிரிழந்ததாக பாதிக்கப்பட்ட பெண் மனுவில் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முதன்மை செயலர் பதில் தர உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். 

Related Stories: