சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொத்ததாக சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. சிறப்பு டிஜிபி வழக்கு விசாரணையை தனி நீதிபதி கண்காணித்து வருதால் மேற்கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு அவசியம் இல்லை என கூறியுள்ளது. வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய முன்னாள் ஒய்வு பெற்ற காவல்துறை கூடுதல் எஸ்பி கே.ராஜேந்திரனின் மனுவை ஐகோர்ட் முடித்து வைத்தது. சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையை கண்காணித்து வருகிறார். விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்ககை தாக்கல் செய்யப்படுகிறது.