சென்னை: வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கிற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்ரன் கோயிலில் திருப்பணிகள் முடிந்து வரும் ஏப்ரல் 29-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதற்கிடையே, குட முழுக்கு விழாவிற்கு லட்சக்கணக்காணோர் வருவார்கள் என்பதால் விழாவை ஒத்திவைக்க வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு திருக்கோயில், திருமடங்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.