தனியார் மருத்துவமனைகள் கொரோனா பாதுகாப்பு மையம் தொடங்க அணுகலாம்? மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் தொற்று  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே சிகிச்சை பெறும் பொருட்டும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விருப்பமுள்ள மற்றும் சிகிச்சை அளிக்க போதிய உட்கட்டமைப்பு வசதியுள்ள தனியார் மருத்துவமனைகள் தனியாகவோ அல்லது பிற தங்கும் விடுதிகளுடன் இணைந்தோ கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு மையங்களை ஆரம்பிக்க பெருநகர சென்னை மாநகராட்சி அனுமதி அளிக்கிறது. இது தொடர்பாக மாநகர நல அலுவலரை (தலைமையகம்) (94450 26050) அணுகலாம்.

Related Stories: