சென்னை: குடலிறக்க நோய்க்கு ஆபரேஷன் செய்து கொண்ட முதல்வர் எடப்பாடி மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களாக வயிறு வலியால் கஷ்டப்பட்டு வந்தார். இதையடுத்து மூன்று நாட்களுக்கு முன் சென்னை, சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு குடலிறக்க நோய் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து நேற்று முன்தினம் காலை முதல்வர் எடப்பாடிக்கு தனியார் மருத்துவமனையில் லேப்ராஸ்கோபி மூலம் ஆபரேஷன் செய்து குடலிறக்க நோய் சரி செய்யப்பட்டது. ஒரு நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த முதல்வர், நேற்று காலை வீடு திரும்பினார். அவர் சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை 3 நாட்கள் யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.