மதுப்பிரியர்கள் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்: புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது டாஸ்மாக் நிர்வாகம்.!!!!

சென்னை; கொரோனா பரவல் காரணமாக மது விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகரித்து வருவதால் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது.  ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனிடையே, தமிழக அரசின் புதிய விதிமுறைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாதது கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஞாயிற்றுகிழமை டாஸ்மாக் கடைகளை  மூடப்படும் என்றும் மற்ற நாட்களில் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:

1. மதுபான சில்லறை விற்பனை கடைகளில் எந்தவொரு கூட்ட நெரிசலும் இருக்கக்கூடாது.  

2. இரண்டு வாடிக்கையாளர்களிடையே குறைந்தது 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

3. ஒரே நேரத்தில், கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது.

4. அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் மேற்பார்வையாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

5. கடைப்பணியாளர்கள் மூன்றடுக்கு முகமூடி (MASK), முககவசம் (Face shield) கையுறைகள் (Gloves) மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினி திரவத்தை (sanitizer) கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

6. கடையை கிருமிநாசினி (sanitizer) கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கடைப் பணியாளர்கள் வேலை நேரத்தில் கிருமிநாசினி திரவத்தை (sanitizer) குறைந்தது 5 தடவைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்.

7. ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமிநாசினி திரவத்தை கொண்டு கடை சுத்தம் செய்வதுடன் கடையை சுற்றிலும் பிளிச்சீங்பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும்.

8. குறைந்தது இரண்டு பணியாளர்கள் கடையின் வெளிப்புறம் நின்று மதுபிரியர்களை சமூக இடைவெளியை பின்பற்றி வர செய்தும், முகக்கவசம் அணிந்து வர செய்தும் விற்பனை பணியை மேற்கொள்ள வேண்டும்.

9. கடைப்பணியாளர்கள் மதுப்பிரியர்களை கடையின் அருகில் மது அருந்த அனுமதிக்காமலும், கடையில் அதிக கூட்டம் சேராமலும், பொது இடங்களில், மது அருந்துவரை தடை செய்தும் பணிபுரிதல் வேண்டும்.

10. முகக்கவசம் அணிந்து வரும் மதுப்பிரியர்களுக்கு மட்டும் மதுவகைகளை விற்பனை செய்ய வேண்டும்.

11. குறைந்தது 50 வட்டங்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதன்பொருட்டு கடையின் எதிரே வரையப்பட்டிருக்க வேண்டும்.

12. விலைபட்டியலில் -வாடிக்கையாளரின் பார்வையில்படும்படி தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும்.

13. 21 வயது நிரம்ப பெறாதவர்களுக்கு கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்தல் கூடாது.

14. எக்காரணம் கொண்டும் மதுபானங்களை மொத்த விற்பனை செய்தல் கூடாது.

Related Stories: