சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உரிய ஒப்புதல்களைப் பெற்று பணிகளை தொடங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கோயில் நிலத்தை மதிப்பீட்டு செய்ய எஸ்.பி.ஐ வங்கி மதிப்பீட்டாளரை நியமித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.