சென்னை: நடிகை ராதாவை 2வது திருமணம் செய்த எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நடிகை ராதா. சுந்தரா டிராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர். இரு நாட்களுக்கு முன்னர் வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரனிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னுடைய கணவர் வசந்தராஜா, என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர் திருவான்மியூர் காவல்நிலையத்தில் பணி செய்தபோது எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. அதன்பின்னர் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு பணி மாறுதல் வாங்கி வந்தார். தற்போது எண்ணூரில் பணியாற்றி வருகிறார். வடபழனி காவல்நிலையத்தில் பணியாற்றும்போது, முதல் மனைவிக்கு தெரியாமல் என்னிடம் குடும்பம் நடத்தினார். ஆனால், கடந்த சில நாட்களாக என்னை அடித்து, உதைக்கிறார். கொடுமைப்படுத்துகிறார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.