நத்தம்: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விசுவநாதன் (72). இவர் சட்டமன்ற தேர்தலில் நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். நேற்று முன் தினம் வேம்பார்பட்டியிலிருந்து சென்னை சென்றார்.