வளிமண்டல சுழற்சியால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!: வானிலை மையம் தகவல்..!!

சென்னை: மராட்டியம் - தமிழகம் இடையிலும், தென்கிழக்கு அரபிக் கடற்பகுதியிலும் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்துக்கு மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய கூடும். ஏப்ரல். 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: