சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த, வழக்கு கடந்த மாதம் 23ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வக்கீல் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் வருவாய்துறை செயலாளர் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, இந்த வழக்கில் சென்னை கலெக்டர் ஏப்ரல் 16ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கலெக்டர் கையெத்திடாமல் அவரது தனி உதவியாளர் கையெழுத்திட்டிருந்தார்.