நாகர்கோவில்: குமரி மாவட்டம், நீண்டகரையை சேர்ந்தவர் ஜோதி. இவர் வாங்கிய நிலத்திற்கு பத்திரபதிவு செய்ய, கணபதிபுரம் சார்பதிவாளர் சசி என்ற பனிமய ஜஸ்சிங்டன் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி ஜோதி கன்னியாகுமரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் ெகாடுத்த ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரத்தை நேற்று ஜோதி கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார் சசியை கைது செய்தனர்.