அக்னிவீர் ஆள்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் மார்ச் 31 கடைசி நாள்

தேனி: இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ், அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு வருகிற 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ், அக்னி வீர் ஆட்சேர்ப்பு தேர்விற்கான அறிவிப்பு கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலமாக வருகிற 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு வருகிற மே 20ம் தேதி ஆன்லைன் வாயிலாக நடக்க உள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மற்றும் இதற்கு நிகரான கல்வித் தகுதியை உடைய திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர் கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 26க்கு பின்னரும், 2006ம் ஆண்டுக்கு முன்னரும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்….

The post அக்னிவீர் ஆள்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் மார்ச் 31 கடைசி நாள் appeared first on Dinakaran.

Related Stories: