தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

பன்வாரிலால் புரோகித் (தமிழக ஆளுநர்): தமிழ்நாட்டு மக்கள் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ சித்திரை நன்நாளில் வாழ்த்துகிறேன்.

எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்): மலரும் இப்புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும்.

தமிழிசை சௌந்தரராஜன் (ஆளுநர், தெலங்கானா மற்றும் புதுச்சேரி):உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா என்ற பெருந்தொற்று நோயை வென்றிட இப்புத்தாண்டு நமக்கு வழிவகுக்கட்டும்.

கே.எஸ்.அழகிரி (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி): இந்த தமிழ் புத்தாண்டு, தமிழர்கள் இழந்த உரிமைகளையும் தன்மானத்தையும் மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்கவும் வழி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஜி.கே.வாசன் (தலைவர், தமாகா): இந்த இனிய நாளில் தமிழ்நாடு மற்றும் உலகவாழ் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

ராமதாஸ் (நிறுவனர், பாமக): தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நலமும், வளமும் கிடைக்க வேண்டும்.

டி.டி.வி.தினகரன் (பொதுச் செயலாளர், அமமுக): ‘பண்பாடு, கலாசாரம், உணவு என எல்லாவற்றிலும் இயற்கையோடு இணைந்த நம்முடைய பழந்தமிழர் வாழ்க்கை முறையை மீட்டெடுப்பதற்கு சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரம் இது’ என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்திடுவோம்.

ஏ.சி.சண்முகம் (நிறுவனர், புதிய நீதிக்கட்சி): விவசாயிகளின்  இன்னல்கள் மறையட்டும், வணிகர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும், நித்திரையில் இருந்து விலகி சித்திரையில் மக்கள் ஆனந்தமாய் வாழ வாழ்த்துகள்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், சரத்குமார் (தலைவர், சமத்துவ மக்கள் கட்சி), என்.ஆர்.தனபாலன் (தலைவர், பெருந்தலைவர் மக்கள் கட்சி), முருகவேல்ராஜன்(மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர்), சேம.நாராயணன் (தலைவர், மக்கள் தேசிய கட்சி), எர்ணாவூர் நாராயணன் (நிறுவனர், சமத்துவ மக்கள் கழகம்),

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, கோகுல மக்கள் கட்சி தலைவர்

எம்.வி.சேகர், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் உள்ளிட்டோர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: