சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதிக்கு கொரோனா தொற்று உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவருக்கு தொற்று இல்லை என்று டிஜிபி அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதற்கிடையே தமிழக காவல் துறை டிஜிபி கடந்த வாரம் தேர்தல் பணி தொடர்பாக டெல்லி சென்று இருந்தார். அதை தொடர்ந்து டிஜிபி திரிபாதி தமிழகம் திரும்பினார். தமிழக தேர்தலுக்கு பிறகு நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு டிஜிபி திரிபாதி புறப்பட்டார்.