சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. தொழிற்கல்வி, பொறியியல் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் 1968-ம் ஆண்டு முதல் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் தேசிய திறன் பயிற்சி நிறுவனம் மத்திய அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் 500-க்கும் அதிகமான மாணவர்கள் தொழிற்கல்வி பயின்று வருகின்றனர். இந்த மத்திய அரசின் பயிலகத்தின் முகப்பு பெயர் பலகையில் தமிழ் மொழி மட்டும் இடம்பெறவில்லை.