கோவை: கோவை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான நூல்கள் எரிந்து சேதமடைந்தன. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த வையாபுரியப்பன் நடத்தி வந்த நூற்பாலையில் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து 5 வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.