நாக்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 பேர் பரிதாபமாக பலி : பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!!

நாக்பூர்: மகாராஷ்டிராவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2வது மாடியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவு அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 30க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிக்கிக் கொண்டன.இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நோயாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 4 நோயாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் சிலர் காயம் அடைந்தனர். சுமார் 27 பேர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் மருத்துவமனையில் இருந்த அனைத்து உபகரணங்களும் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் மராட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாக்பூர் தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நாக்பூர்  மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த செய்தி அறிந்து நான் மிகவும் வருத்தமுற்றேன். என் எண்ணங்கள் அனைத்தும் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன, மேலும் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன், என்றார். 

Related Stories: