சென்னை: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கோவி ஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை ராயபுரம் சிமின்டரி சாலையில் உள்ள மாநகராட்சி மினி கிளினிக்கில் மீனாட்சி அம்மன் பேட்டையை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலையில் தடுப்பூசி போடச் சென்றுள்ளனர். அப்போது, தடுப்பூசி இல்லை என்று செவிலியர் மற்றும் மருத்துவரும் அங்கிருந்த ஊழியர்கள் பொதுமக்களை மரியாதை குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்த 10க்கும் மேற்பட்டோர் ராயபுரம் மேற்கு கல்லறை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்வதாக கூறியதால் மறியல் கைவிடப்பட்டது.