புதுடெல்லி: கடந்த மே மாதம் தொடங்கி இந்தியா-சீனா இடையே, லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதனால் இருநாடுகளும் வீரர்களை குவித்தன. எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை மூலமாக பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. இதனை தொடர்ந்து ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 10 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து இருநாட்டு வீரர்களும் திரும்ப பெறப்பட்டனர்.