புதுடெல்லி; டெல்லி ஷாதரா துணை போலீஸ் கமிஷனர் ஆர். சத்யசுந்தரத்திடம் விமான பணிப்பெண் பயிற்சி மாணவி ஒரு புகாா அளித்தார். அந்த புகாரில்,’ எனது இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வருகிறான். கடந்த 3நாட்களாக அவனது தொல்லை தாங்கமுடியவில்லை. என்னை அவன் பாலியல் உறவுக்கு அழைக்கிறான். மேலும் ஆபாசமாக பேசுவதுடன், மிரட்டி தொந்தரவு செய்கிறான். ஆபாசமான, அருவெறுப்பான தகவல்களை அனுப்பி வைக்கிறான். அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரித்த போது அனைத்து தகவல்களும் உண்மை என்பது தெரியவந்தது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமாண பணிப்பெண் பயிற்சி மாணவியை அவன் சரமாரியாக மிரட்டி இருப்பது தெரியவந்தது.