பேரையூர்: பேரையூர் பஸ் ஸ்டாண்டில் ஒரு மாதமாக உடல்நிலை பாதித்து ஆதரவின்றி கிடந்தவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பேரையூர் பேருந்துநிலையத்தில் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக ஒரு நபர் கிடந்தார். இது சம்மந்தமாக பேரையூர் காவல்துறையினர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனாலும் இவருக்கு எந்த உதவியும் செய்ய யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் துரைப்பாண்டி, வீரபாண்டி ஆகியோர் நேற்று அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.