டெல்லி: இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார் பிரதமர் மோடி. அவர் மார்ச் 1 ஆம் தேதி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொணடார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார். இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.