விழுப்புரம்: நிலம் வழங்கியதற்கு ரூ.39.36 கோடி இழப்பீடு வழங்காததால், ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் சென்றனர். விழுப்புரத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சண்முகத்துக்கு சொந்தமான 6 ஏக்கர் 75 சென்ட் இடத்தை கடந்த 1991ம் ஆண்டு, அரசு நிலஆர்ஜிதம் செய்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு வழங்கியது. இதில், அவரது மகன் சிவானந்தத்தின் பங்கான 1 ஏக்கர் 50 சென்ட் இடத்துக்கு சதுர அடிக்கு 8 ரூபாய் 10 பைசா என கணக்கிட்டு ரூ.4,55,332 வழங்கியது. இந்த தொகை சந்தை மதிப்பைவிட குறைவாக இருப்பதாகக்கூறி, விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் சிவானந்தம் வழக்கு தொடர்ந்தார்.