சென்னை: தமிழகத்தில் 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலைவிட தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் ஒரு சதவீதம் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த சட்டமன்ற தேர்தலை விட அதாவது 2016ம் ஆண்டு தேர்தலை விட 2 சதவீதம் குறைவு ஆகும். 2016ம் ஆண்டு 74.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. அதே நேரம் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.