புதுச்சேரி : கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்பதிவு செய்தால் மட்டுமே புற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும் என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவிட் நோய் தொற்று மிக வேகமாக பரவி வரும் வேளையில், மருத்துவமனை வளாகங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது தவிர்க்க இயலாததாகும். கோவிட் தொற்று மருத்துவமனை மூலம் பரவுவதை தவிர்க்க, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 9-ம் தேதி முதல் அனைத்து மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் முன்பதிவு செய்து தொலை மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே வெளிப்புற சிகிச்சை சேவைகள் வழங்கப்படும் என்றும், வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன்பதிவு பெற வேண்டியது கட்டாயம் என்றும், மருத்துவமனையில் அனைத்து அவசர சேவைகள், எப்பொழுதும் போல எந்த முன் பதிவும் இன்றி தொடரும்.