சென்னை: சசிகலாவை வாக்களிக்க அனுமதிக்கக்கோரி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அமமுக ஆயிரம்விளக்கு தொகுதி வேட்பாளர் வைத்தியநாதன் மனு அளித்தார். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை அடுத்து அவருடன் இருந்த சசிகலா, இளவரசி உள்ளிட்ட 19 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, அமமுக ஆயிரம்விளக்கு தொகுதி வேட்பாளர் வைத்தியநாதன் நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை தலைமை செயலகத்தில் சந்தித்து புகார் மனு அளித்தார். அப்போது, சசிகலாவிற்கு வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.