கே.வி.குப்பம்: வேலூர் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மாலதி(45). இவர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், மாலதி கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருந்தார். நேற்றிரவு கே.வி.குப்பம் அடுத்த பி.கே.புரம் அருகே மாலதி மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த லாரி மீது மோதியது. அப்போது கார் அப்பளம் ெநாறுங்கி, அதிலிருந்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் படுகாயமடைந்தனர்.