கூடலூர்: கூடலூர் பந்தலூர் பகுதிகளில் வன எல்லைகளில் உள்ள கிராமங்களில் அடிக்கடி காட்டு யானைகள் நுழைந்து பொது மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு சேதம் விளைவித்து வருவதோடு விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. தற்போது வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதாலும் பசுந்தீவனங்கள் தட்டுப்பாடு காரணமாகவும் வனஎல்லையோரம் உள்ள கிராமப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களை நோக்கி காட்டு யானைகள் வருவது அதிகரித்து உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் உப்பட்டி பெருங்கரை பகுதியில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்தனர். இதேபோல் முதுமலை வன எல்லையை ஒட்டிய போஸ்பாரா, கர்கப்பாளி, நெல்லிக்கரை,