திருநள்ளாறில் பாஜகவினர் தங்கக் காசு விநியோகம் : போலீசார் வழக்குப்பதிவு

திருநள்ளாறு : திருநள்ளாறில் பாஜகவினர் தங்கக் காசு மற்றும் பணப்பட்டுவாடா செய்துவிட்டு தப்பி ஓடினர். காரைக்கால் மாவட்டம் சூரங்குடியில் வாக்காளர்களுக்கு பாஜகவினர் தங்கக்காசு விநியோகித்தனர்.பறக்கும் படை அதிகாரிகளை கண்டவுடன் கையில் இருந்த பையை போட்டுவிட்டு தப்பி ஓடினர்.பாஜகவினர் விட்டுச் சென்ற பையில் 149 தங்கக் காசுகளும் 96 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது. இதையடுத்து திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: