ராயபுரம் தொகுதியில் சோதனை அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.10 லட்சம் பறிமுதல்

தண்டையார்பேட்டை: ஆர்.கே.நகர், ராயபுரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று மதியம் ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது நமச்சிவாயம் தெருவை சேர்ந்த அதிமுக பிரமுகர் வீட்டில், வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த பணம் மற்றும் டோக்கன் மற்றும் செல்போன் எண்களுடன் நோட்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது வீட்டில் இருந்து ரூ.10 லட்சம், டோக்கன், செல்போன் எண்கள் எழுதப்பட்டு இருந்த நோட்டு ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: