சென்னை: எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் நேற்று காலை புதுப்பேட்டை, எழும்பூர், எத்திராஜ் கல்லூரி, மிர்மதன் அலி தெரு, கொய்யாத்தோப்பு, வீரபத்திரன் தெரு, பாஷா தெரு, ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, ஆதித்தனார் சாலை, நரியங்காடு போலீஸ் குடியிருப்பு, பாந்தியன் சாலை, காசா மேஜர் சாலை, காந்தி இர்வின் சாலை, தாசபிரகாஷ் உள்ளிட்ட பகுதிகளில் தெரு தெருவாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் அப்பகுதியில் உள்ள சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.