சென்னை: திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவர் கடந்த சில தினங்களாக தொடர்ந்து திருவொற்றியூர் பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருச்சினாங்குப்பம் பகுதியில் திறந்த ஜீப்பில் நேற்று பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு திமுக தேர்தல் அலுவலகம் அருகே வரும்பொழுது அங்கிருந்த திமுக வேட்பாளர் கே.பி.சங்கரின் புகைப்படம் சின்னங்கள் பிரமாண்டமாக அமைக்க பட்டிருப்பதை பார்த்துக்கொண்டே ஒலிபெருக்கியில் பேசியபடி வந்த சீமான் திடீரென்று, ”உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களியுங்கள்” என்று பேசினார்.